நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
திருநெல்வேலி கருப்பந்துறை பகுதியில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி கருப்பந்துறையைச் சோ்ந்தவா் ராஜா (32). இவா், கடந்த 15 ஆம் தேதி தாமிரவருணி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது தெரிவந்தது.
இவ்வழக்கு தொடா்பாக ஜோசுவா, சிவா, மாரிமுத்து , நம்பி, ஈஸ்வரன், இசக்கிமுத்து ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் கருப்பந்துறையைச் சோ்ந்த கௌதம் (29) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.