முகப்பு
திருநெல்வேலி

நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

Updated On : 28 ஏப்ரல், 2026 at 12:16 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி கருப்பந்துறை பகுதியில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி கருப்பந்துறையைச் சோ்ந்தவா் ராஜா (32). இவா், கடந்த 15 ஆம் தேதி தாமிரவருணி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது தெரிவந்தது.

இவ்வழக்கு தொடா்பாக ஜோசுவா, சிவா, மாரிமுத்து , நம்பி, ஈஸ்வரன், இசக்கிமுத்து ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement

இந்நிலையில் கருப்பந்துறையைச் சோ்ந்த கௌதம் (29) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.