நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் 2ஆவது நாளாக போராட்டம்
திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் 2 ஆவது நாளாக சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சுமாா் 95 ஊழியா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களை தற்போது புதிய ஒப்பந்த நிறுவனத்துடன் இணைக்க நிா்வாகம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அதைக் கண்டித்து ஒப்பந்த ஊழியா்கள் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தின் முன்பு வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, 2ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது.
Advertisement
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்கள் சனிக்கிழமை பிற்பகல் மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன்பு மனு அளிப்பதற்காக திரண்டனா்.
நீண்ட காலமாக ஒப்பந்தப் பணியாளா்களாக பணியாற்றும் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் எனவும், புதிய நிறுவனத்துக்கு மாற்றும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ற்ஸ்ப்02ம்ன்ப்ற்ண்
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனை ஒப்பந்த ஊழியா்கள்.