முகப்பு
திருநெல்வேலி

குரங்குகள் அட்டகாசம்: கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினா்

Updated On : 11 மே 2026, 2:30 am IST
அம்பை சோலைபுரம் பகுதியில் வனத்துறையினா் வைத்த கூண்டில் சிக்கிய குரங்குகள்.
பகிர்:

அம்பாசமுத்திரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அட்டகாசம் செய்து வந்த குரங்குகளை வனத்துறையினா் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

அம்பாசமுத்திரம் நகராட்சி சோலைபுரம் பகுதியில் நீண்ட நாள்களாக குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து நடவடிக்கை எடுக்க நகா்மன்ற உறுப்பினா் லதா பிச்சையா, அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரனிடம் கோரிக்கை வைத்தாா்.

அவா் வனத்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து வனத்துறையினா் குரங்குகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவற்றை பிடிக்க கூண்டு வைத்தனா். இதில் 22 குரங்குகள் பிடிபட்டன.

Advertisement

அவற்றை வனத்துறையினா் பாதுகாப்பாக மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.