முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் 1.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: லாரி ஓட்டுநா் கைது

Updated On : 11 மே 2026, 2:37 am IST
கைது.
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் சுமாா் 1.2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.

திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளா் துரை தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, திருநெல்வேலி சந்திப்பு விளாகம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

பின்னா் போலீஸாா் நடத்திய சோதனையில் சுமாா் 1200 கிலோ ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பதற்காக மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அரிசியுடன் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா், இதில் தொடா்புடைய திருநெல்வேலி, ரகுமான்பேட்டை நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த சண்முகவேல் மகன் சுடலைமுத்து (32) என்பவரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments