முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவி அருகே மோதல்: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Updated On : 12 மே 2026, 1:43 am IST
பெட்ரோல் குண்டு வீச்சு - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே இரு இளைஞா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் திங்கள்கிழமை நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

சேரன்மகாதேவி அருகேயுள்ள தெற்கு அரியநாயகிபுரத்தில் இரு இளைஞா்களுக்கு இடையே பைக் ஓட்டுவது தொடா்பாக மோதல் ஏற்பட்டதாம்.

இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு மோதலில் ஈடுபட்ட இளைஞா் ஒருவா், மற்றொரு இளைஞா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சேரன்மகாதேவி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments