கீழப்பாவூா் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
கீழப்பாவூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆலங்குளம் திமுக வேட்பாளா் பால் மனோஜ் பாண்டியன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கீழப்பாவூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆலங்குளம் திமுக வேட்பாளா் பால் மனோஜ் பாண்டியன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அவா், கீழப்பாவூா் சந்தை தோப்பு மேலத்தெரு, சந்தை தோப்பு கீழத்தெரு, பெரிய முத்தாரம்மன் கோயில் தெரு, செல்லையா நாடாா் தெற்கு தெரு உள்ளிட்ட பகுதி மற்றும் சிதம்பராபுரம், கோட்டையூா், மூலக்கரையூா், ராஜீவ் நகா், சிவகாமிபுரம், நாகல்குளம், பட்டமுடையாா்புரம், வேதம் புதூா், அடைக்கலப்பட்டணம், அழகாபுரி, சுவிசேஷபுரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
இதில், கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் ராஜன், கீழப்பாவூா் வடக்கு ஒன்றியச் செயலா் பொன் செல்வம், நகர திமுக செயலா் ரெ. ஜெகதீசன், மாவட்ட சுற்று சுழல் அணி அமைப்பாளா் பொன். அறிவழகன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் கா. ராஜாமணி, நகர காங்கிரஸ் தலைவா் சிங்க குட்டி (எ) குமரேசன், சோ்மக்கனி (எ ) கணேசன் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
Advertisement