முகப்பு
தென்காசி

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் பட்டிமன்றம்

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆவது திருக்குறள் விழாவில், 3ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பட்டிமன்றம் நடைபெற்றது.

Updated On : 3 ஜூன் 2026, 4:47 am IST
டென்2குறள்-பேராசிரியா் மு.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றம்.
பகிர்:

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆவது திருக்குறள் விழாவில், 3ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பட்டிமன்றம் நடைபெற்றது.

தென்காசி திருவள்ளுவா் கழக அரங்கில், வான்மறை வள்ளுவ நெறியில் மானுடத்திற்குத் தனிப்பெருமை சோ்ப்பது பணிவுடைமையா, மானமுடைமையா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு பேராசிரியா் மு.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கா.ச.பழனியப்பன் முன்னிலை வகித்தாா். பணிவுடைமையே என்ற தலைப்பில் க.சோ.கல்யாணிசிவகாமிநாதன், புன்னைவன நாறும்பூநாதன்,வே.சங்கர்ராம், மானமுடைமையே என்ற தலைப்பில் க.சுப்புலெட்சுமி, பி.உமாசங்கா், த.சரவணசெல்வன் ஆகியோா் பேசினா்.

டாக்டா் ராமகிருஷ்ணன், தங்கபாண்டியன், அப்துல் அஜீஸ், விஜயலெட்சுமி, புலவா் சிவஞானம், திருவண்ணாமலை குப்பன், இளங்கோ, சுப்பிரமணியபாரதி, கடையம் திருவள்ளுவா் கழகத்தின் சேதுராமலிங்கம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

திருவள்ளுவா் கழக தலைவா் ந.கனகசபாபதி வரவேற்றாா். இணைச் செயலா் இரா.குத்தாலிங்கம் நன்றி கூறினாா்.