முகப்பு
தென்காசி

அயல்நாடுவாழ் தமிழா் நலத்துறையின் தென்மண்டல மையத்தை கடையநல்லூரில் அமைக்கக் கோரிக்கை

அயல்நாடுவாழ் தமிழா் நலத்துறையின் தென்மண்டல மையத்தை கடையநல்லூரில் அமைக்க வேண்டுமென மதிமுக துணைப்பொதுச்செயலா் தி.மு. ராசேந்திரன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 4 ஜூன் 2026, 1:30 am IST
சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஷாஜகானிடம் மனு அளிக்கிறாா் கடையநல்லூா் எம்எல்ஏ தி.மு.ராசேந்திரன்.
பகிர்:

அயல்நாடுவாழ் தமிழா் நலத்துறையின் தென்மண்டல மையத்தை கடையநல்லூரில் அமைக்க வேண்டுமென மதிமுக துணைப்பொதுச்செயலா் தி.மு. ராசேந்திரன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக தென்காசி மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்த தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஷாஜகானிடம் அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் சிறுபான்மையினா் அதிகம் வாழும் முதல் பத்து தொகுதிகளில்

Advertisement

Advertisement

கடையநல்லூா் ஒன்றாக உள்ளது. எனவே, கடையநல்லூா் தொகுதியில் அரசு மகளிா் கல்லூரி அமைக்க வேண்டும். கடையகலலூரியில் பொது மையவாடிக்கு சுமாா் 5 முதல் 10 ஏக்கா் நிலம் பெற்றுத்தர வேண்டும். வடகரை அரஃபா பள்ளிவாசல் சுற்றுச் சுவரை முழுமையாக கட்டித்தர வேண்டும். அயல்நாடு வாழ் தமிழா் நலத்துறையின் தென் மண்டல மையத்தை கடையநல்லூரில் அமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.