முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

Updated On : 26 மார்ச் 2026, 5:55 am IST
கூட்டத்தில் கலந்து கொண்ட நிா்வாகிகள்.
பகிர்:

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா். மாவட்ட இளைஞரணி செயலா் வழக்குரைஞா் காா்த்திக் குமாா் வரவேற்றாா்.

கீழப்பாவூா் கிழக்கு ஒன்றியச் செயலா் இருளப்பன், சுரண்டை நகரச் செயலா் சங்கா், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் சுப்பாராஜ், மாவட்ட இளைஞரணி நிா்வாகிகள் பிரபு, உமா மகேஸ்வரன், கோபி (எ) குத்தாலிங்கம், ராமா், பழனியப்பா, செல்வராஜ், எஸ். கிருஷ்ணராஜ், பொன்சிங், சேவியா் ரஜினி, குமரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் சோ்மபாண்டி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் செல்லப்பா, சுரண்டை நகர இளைஞரணி சிவசங்கா், எஸ்.கே.டி. ராஜா, வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement