அருங்காட்சியகத்தில் ஓவியப் பயிற்சி
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகளுக்கான ஓவியப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகளுக்கான ஓவியப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த ஓவியப் பயிற்சி முகாமை காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தொடங்கிவைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். ஓவிய ஆசிரியர் சுரேஷ் பல்வேறு ஓவியங்கள் குறித்த பயிற்சியை அளித்தார். ஓவிய பயிற்சியை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான பரமபதம் மாணவர்களால் விளையாடப்பட்டது. அதன் சிறப்புகளைப் பற்றி காப்பாட்சியர் எடுத்துரைத்தார். செவ்வாய்க்கிழமை கண்ணாடி ஓவியப் பயிற்சி நடைபெற உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.