திசையன்விளையில் பள்ளி மாணவர் தற்கொலை
திசையன்விளையில் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திசையன்விளையில் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலன். இவர், தொழில் நிமித்தமாக கடந்த 10 நாள்களுக்கு முன்னர் திசையன்விளையில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இவரது மகன் லட்சுமி காந்தன் (17). நாசரேத் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
இவரது மோட்டார் சைக்கிள் பழுதானதால், அதை சரிசெய்ய, தாய் சுப்புலட்சுமியிடம் பணம் கேட்டாராம். இதில், தாய், மகனுக்குள் பிரச்னை ஏற்பட்டதால்.இந்நிலையில், லட்சுமி காந்தன் வீட்டில் உள்பக்கமாக பூட்டி கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த திசையன்விளை போலீஸார், மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.