நெல்லையில் விவேகானந்தர் மன்ற கூட்டம்
பாளையங்கோட்டையில் விவேகானந்தர் மன்றத்தின் 193 ஆவது கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் விவேகானந்தர் மன்றத்தின் 193 ஆவது கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மன்றத் தலைவர் பா. வளன் அரசு தலைமை வகித்தார். விவேகானந்தரின் ரயில் பயணம் எனும் தலைப்பில் சிவ. கிருபாகரன் சொற்பொழிவு ஆற்றினார். இதையடுத்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேராசிரியர் சிவ. சத்தியமூர்த்தி, வரலாற்று ஆய்வாளர் செ. திவான் ஆகியோர் பேசினர். வெள்ளத்துரை, ராஜகோபால், சு. முத்துசாமி, முத்துக்குமார், திருக்குறள் முருகன், கோதை மாறன், குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஓய்வுபெற்ற ஆசிரியர் வை. ராமசாமி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.