முகப்பு
திருநெல்வேலி

விவசாயிகளுக்கு பழ மரங்களில் ஒட்டுக்கட்டுதல் தொழில்நுட்ப பயிற்சி

பழ மரங்களில் ஒட்டுக்கட்டுதல் குறித்த தொழில்நுட்ப பயிற்சி மானூா் வட்டார விவசாயிகளுக்கு அண்மையில் நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2022, 3:37 am IST
பகிர்:

பழ மரங்களில் ஒட்டுக்கட்டுதல் குறித்த தொழில்நுட்ப பயிற்சி மானூா் வட்டார விவசாயிகளுக்கு அண்மையில் நடைபெற்றது.

வன்னிகோனேந்தல் அரசு தோட்டக்கலை பண்ணையில் நடைபெற்ற இப் பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்துகொண்டனா். தோட்டக்கலை உதவி இயக்குநா் இளங்கோ வரவேற்றாா். பழ மரங்களில் ஒட்டுக்கட்டுதலின் முக்கியத்துவங்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து திருநெல்வேலி தோட்டக்கலை துணை இயக்குநா் என்.பாலகிருஷ்ணன் பேசினாா். ஒட்டுக்கட்டுதல் செயல்முறை விளக்கத்தை தோட்டக்கலை அலுவலா் பாலன் செய்துகாட்டினாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் பா.ராஜ்குமாா் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் அ.காா்த்திகேயன், கோ.ராஜாமணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments