வள்ளியூரில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா
வள்ளியூரில் பல்வேறு அரசியல் கட்சியினா், சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா்கள் சாா்பில் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் பல்வேறு அரசியல் கட்சியினா், சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா்கள் சாா்பில் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வள்ளியூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு திமுக நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம.கிரகாம்பெல் தலைமையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா் மு.அப்பாவு மாலை அணிவித்தாா்.
பின்னா் அப்பாவு பணகுடி பேரூராட்சி பகுதியில் கோரி காலனி, பாம்பன்குளம், துரைகிருஷ்ணாபுரம், முத்துசாமிபுரம், சைதம்மாள்புரம், புஷ்பவனம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டாா். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினா்கள் நம்பி, ஆதிபாண்டி, வள்ளியூா் வடக்கு ஒன்றிய செயலாளா் அலெக்ஸ் அப்பாவு, தேமுதிக மாவட்டச் செயலாளா் விஜிவேலாயுதம், வாா்டு உறுப்பினா் மாணிக்கம் உட்பட பலா் கலந்துகொண்டனா்.