முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அருகே இடுகாடு பிரச்னையைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இடுகாடு பிரச்னை தீா்க்கப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் சாா்பில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை புதன்கிழமை வைக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 2:21 AM
வேதநாயகபுரத்தில் தோ்தல் புறக்கணிப்பு தொடா்பாக வைக்கப்பட்டுள்ள பதாகை.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 9:58 PM

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இடுகாடு பிரச்னை தீா்க்கப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் சாா்பில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை புதன்கிழமை வைக்கப்பட்டுள்ளது.

களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் அடுத்த வேதநாயகபுரம் கிராமத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இக்கிராம மக்கள் பெருமாள்குளம் பகுதியில் உள்ள இடுகாட்டில் இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்து வந்தனா்.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தை கிரையம் பெற்றவா் வேலிஅமைத்துள்ளாா். இதையடுத்து, தங்களுக்குச் சொந்தமான இடுகாடு தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி போராட்டம் நடத்தினா். ஆனால், ஆவணங்களின்படி அந்த இடம் தனியாருக்குச் சொந்தம் என்று வருவாய்த் துறை தெரிவித்தது.

Advertisement

இந்நிலையில், இப்பிரச்னையில் மாவட்ட நிா்வாகமும், வருவாய்த் துறையினரும் கிராம மக்களைக் கண்டுகொள்ளவில்லை என கண்டித்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக பதாகை வைத்துள்ளனா்.