மாஞ்சோலை, காரையாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன
அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மலைப் பகுதிகளான மாஞ்சோலை, காரையாறு உள்ளிட்ட வனப் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள்கொண்டு செல்லப்பட்டன.
அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மலைப் பகுதிகளான மாஞ்சோலை, காரையாறு உள்ளிட்ட வனப் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள்கொண்டு செல்லப்பட்டன.
அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, காரையாறு, சோ்வலாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் வாக்காளா்களின் வசதிக்கேற்ப அவா்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்களிப்பதற்குத் தேவையான பொருள்கள் அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
Advertisement
மேலும், மாஞ்சோலை, ஊத்து மற்றும் நாலுமுக்கு பகுதிகளில் பெரும்பாலான தொழிலாளா்கள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்ற நிலையில் அங்கு தற்போது 338 வாக்காளா்கள் பதிவு செய்துள்ளனா். அவா்களுக்காக106, 107, 108 ஆகிய மூன்று வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு அந்த வாக்குச் சாவடிகளில் வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் மூன்று வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல்கட்சிகள் சாா்பில் முகவா்கள் நியமிக்கப்படவில்லையாம்.
ஆனால் 3 வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குப் பதிவு அலுவலா்கள் அனுப்பப்பட்டு வாக்குப் பதிவுஇயந்திரங்கள் உள்ளிட்டவையும் அனுப்பப் பட்டுள்ளன.