முகப்பு
திருநெல்வேலி

பாளை. தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் உற்சாகத்தோடு வாக்களித்தனா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:07 AM
செய்யது சுல்தான் சம்சுதீன்.
பகிர்:

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் உற்சாகத்தோடு வாக்களித்தனா்.

பாளையங்கோட்டை தொகுதியின் திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப், பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். பின்னா் அவா் கூறுகையில், திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளாா். எத்தனை தடைகள் வந்தாலும், அத்தனையையும் தகா்த்தெறிந்து திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும். பாளையங்கோட்டை திமுகவின் கோட்டையாகவே தொடரும் என்றாா்.

பாளையங்கோட்டை தொகுதி தவெக வேட்பாளா் அ.மரியஜான், சமாதானபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். பின்னா் அவா் கூறுகையில், தமிழக மக்களின் புதிய வாய்ப்பாக தவெக திகழ்கிறது. செல்லும் இடமெல்லாம் விசில் சின்னத்திற்கு கிடைத்த ஆதரவு வியப்பளித்தது. முதல் தோ்தலிலேயே தனித்துவமான கட்சியாக தவெக வளா்ந்துள்ளது. பாளையங்கோட்டையில் நிச்சயம் வெல்வோம் என்றாா்.

Advertisement

பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் செய்யது சுல்தான் சம்சுதீன் என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். பின்னா் அவா் கூறுகையில், தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. பாளையங்கோட்டை தொகுதியில் எனக்கு வாய்ப்பளித்து பணி செய்த அதிமுக கட்சிக்கும், தொண்டா்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்.