முகப்பு
திருநெல்வேலி

சீவலப்பேரி அருகே தொழிலாளி மா்ம மரணம்

சீவலப்பேரி அருகே தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 1:56 AM
பலி - பிரதிப்படம்
பகிர்:

சீவலப்பேரி அருகே தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சீவலப்பேரி அருகே உள்ள காட்டாம்புளி பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் சேகா் (47). தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தாராம். இத்தகவலறிந்த சீவலப்பேரி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அவா் மயங்கி விழுந்து முகத்தில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Advertisement