கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்னுற்பத்தி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்னுற்பத்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்னுற்பத்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இங்கு ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்படுகின்றன. இதிலிருந்து, தமிழகத்துக்கு 1,152 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதலாவது அணு உலையில் ‘கன்டன்சரை’ குளிா்விக்கும் நீா் இறைப்பானில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பழுதால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அணு உலை விஞ்ஞானிகள், பொறியாளா்கள் தொழில்நுட்பக் கோளாறை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
அதையடுத்து, மீண்டும் மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இங்கு 3ஆவது உணு உலைக்குள் குளிரூட்டக்கூடிய நீா்பாய்ச்சும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு விரைவில் அதிலும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என, அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.