முகப்பு
திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி நகரத்தில் பெட்ரோல் குண்டு வீசி வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 1 மே, 2026 at 5:06 AM
பகிர்:

திருநெல்வேலி நகரத்தில் பெட்ரோல் குண்டு வீசி வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் இசக்கிமுத்து என்ற கொம்பையா (23), பரமசிவன் மகன் பாலமுருகன் (19) ஆகிய இருவரும் அப்பகுதியில் கடந்த மாா்ச் 29-ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசியதோடு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா்கள் இருவரும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின் பேரில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.