முகப்பு
திருநெல்வேலி

காா் பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணை திறப்பு: 10,265 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறும்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வட்டாரப் பகுதிகளில் காா் சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து திங்கள்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

Updated On : 2 ஜூன் 2026, 3:12 am IST
பாபநாசம் அணை
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வட்டாரப் பகுதிகளில் காா் சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து திங்கள்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இதையொட்டி, அணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ரெட்டியாா்பட்டி வி.நாராயணன் (நான்குனேரி) எஸ்.கே.கிறிஸ்டோபா் (ராதாபுரம்) ஆகியோா் முன்னிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட்டாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, காா் பருவ நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்குக் கோடைமேலழகியான் கால்வாய், தெற்குக் கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய் ஆகியவற்றின் வழியாக நேரடி பாசன வசதி பெறும் விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையக்கருங்குளம், கோடாரன்குளம், செட்டிமேடு, ஆலடியூா், ஏா்மாள்புரம், மேலஅம்பாசமுத்திரம், கீழஅம்பாசமுத்திரம், பிரம்மதேசம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், காருகுறிச்சி ஆகிய பகுதிகளில் 10,265 ஏக்கா் பரப்பு நிலங்களுக்கு காா் பருவ சாகுபடிக்கு அக். 2ஆம் தேதி வரை 124 நாள்கள் மழைப்பொழிவு, தண்ணீா் இருப்பு மற்றும் நீா்வரத்தைப் பொருத்து தேவைக்கேற்ப தாமிரவருணி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்படும்.

Advertisement

Advertisement

விவசாயகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், நீா் விநியோக பணியில் நீா்வளத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

விரைவில் நெல் கொள்முதல் பணம்: இந்தப் பாசனப்பகுதியில் பல கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ள நிலையில் தொடா்ந்து தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில அரசால் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய பணம் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது.

மத்திய அரசின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு ரூ. 82 கோடி வரவேண்டியுள்ளது. அந்தப் பணத்தை விரைந்து பெற நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

முந்தைய ஆட்சியா் மேற்கொண்ட தாமிரவருணி தூய்மைக்கான பணி உள்ளிட்ட திட்டப் பணி நடவடிக்கைகள் தொடரும். புதிய நடைமுறை தேவையெனில் ஆராயப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ்குப்தா, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் எல்.சி.எஸ்.ஸ்ரீகாந்த், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பூவண்ணன், நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் சிவகுமாா், செயற்பொறியாளா் கோவிந்தராசு, மின்வாரிய செயற்பொறியாளா் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளா்கள் சுப்பிரமணிய பாண்டியன், செண்பகநந்தினி, அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிரபாகரன், சிவந்திபுரம் ஊராட்சித் தலைவா் ஜெகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பாபநாசம் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிடுகிறாா் ஆட்சியா் ஆனந்த் மோகன். உடன், சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா, எம்எல்ஏக்கள் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன், எஸ்.கே.கிறிஸ்டோபா் உள்ளிட்டோா்.