முகப்பு
திருநெல்வேலி

சிறுமியிடம் அத்துமீறிய போதை ஆசாமி போக்ஸோ வழக்கில் கைது

திருநெல்வேலியில் மது போதையில் சிறுமியிடம் அத்துமீறிய போதை ஆசாமியை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 3 ஜூன் 2026, 4:44 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலியில் மது போதையில் சிறுமியிடம் அத்துமீறிய போதை ஆசாமியை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் முத்து (36). நயினாா்குளம் மாா்க்கெட்டில் வேலை செய்து வருகிறாா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாா்க்கெட்டுக்கு வந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா், திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முத்துவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement