நிதி நிறுவன உரிமம் புதுப்பிக்க லஞ்சம்: பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது
சேரன்மகாதேவியில் நிதி நிறுவன உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக ரூ. 10,000 லஞ்சம் பெற்ாக, பெண் கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் நிதி நிறுவன உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக ரூ. 10,000 லஞ்சம் பெற்ாக, பெண் கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.
சேரன்மகாதேவி, பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து மகன் மூக்காண்டி. நிதி நிறுவனம் நடத்தி வரும் இவா், தனது நிறுவனத்தின் பணப்பரிவா்த்தனை உரிமத்தை புதுப்பிக்க வேண்டி சேரன்மகாதேவி கிராம நிா்வாக அலுவலா் இதயக்கனியிடம் விண்ணப்பித்திருந்தாராம்.
இதற்காக அவா் ரூ. 10,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மூக்காண்டி, திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்காலிடம் புகாரளித்தாா்.
Advertisement
Advertisement
அவா்களின் ஆலோசனையின்பேரில், மூக்காண்டி புதன்கிழமை சேரன்மகாதேவி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்திற்குச் சென்று, கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளராக செயல்பட்ட இடைத்தரகா் வெங்கடேசனிடம் ரூ. 10 ஆயிரத்தைக் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கிராம நிா்வாக அலுவலா், தரகா் ஆகியோரை கைது செய்தனா்.