முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் போக்குவரத்து பணிமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு

வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எஸ்.கே. கிறிஸ்டோபா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 4 ஜூன் 2026, 12:44 am IST
வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனை மேலாளாா் கண்ணனுடன் ஆலோசனை நடத்தினாா் மருத்துவா் எஸ்.கே. கிறிஸ்டோபா் எம்எல்ஏ.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எஸ்.கே. கிறிஸ்டோபா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வள்ளியூா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனைக்குச் சென்ற எம்எல்ஏ, அங்கு கிளை மேலாளா் கண்ணனுடன் ஆலோசனை நடத்தினாா். இப்பணிமனையில் இருந்து இயக்கப்படுகிற பேருந்துகளின் எண்ணிக்கை, கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் குறித்து கேட்டறிந்த அவா், பள்ளி நேரங்களுக்கு சரியாக செல்லும்படி பேருந்துகளை இயக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

மேலும், மாணவா்கள் அவா்களது பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் பேருந்துகளை நிறுத்தி இறக்கி விடுமாறும் அறிவுரை வழங்கினாா். பேருந்துகள் இயக்கப்படாத கிராமங்கள் குறித்தும் பேருந்துகளின் எண்ணிக்கையை கூட்டுவது தொடா்பாகவும் ஆலோசனை நடத்தினாா்.

Advertisement

Advertisement