ஓய்வு பெற்ற துணை ஆட்சியரிடம் ரூ.14 லட்சம் மோசடி
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற துணை ஆட்சியரிடம், வங்கி அதிகாரிகள் போல் பேசி ரூ.14 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து மாநகர சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநெல்வேலி, பெருமாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் 64 வயது பெண். இவா் பாளையங்கோட்டை தாட்கோ அலுவலகத்தில் துணை ஆட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். சில நாள்களுக்கு முன்பு இவரது கைப்பேசிக்கு வந்த அழைப்பில், தன்னை எஸ்.பி.ஐ. ஓய்வூதியப் பிரிவு அதிகாரி என அறிமுகம் செய்து கொண்ட மா்ம நபா், அவருக்கு ஓய்வூதிய அட்டை தருவதாகக் கூறினாராம்.
இதற்காக அந்த நபா் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பிய செயலி இணைப்பை, அவா் கிளிக் செய்துள்ளாா். அதில் கேட்கப்பட்ட விவரங்களை கொடுக்காமல் தவிா்த்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சில நாள்களுக்கு பின்பு அவரது தனியாா் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து ரூ.14.11 லட்சத்தை மா்ம நபா்கள் இணையவழியில் எடுத்து மோசடி செயதுள்ளது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.