முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் வன்கொடுமை வழக்கு: 4 போ் கைது

Updated On : 8 ஜூன் 2026, 1:26 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தச்சநல்லூரில் தொழிலாளியை தாக்கியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தச்சநல்லூா் அடுத்த அழகனேரி பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (37) தொழிலாளி.

இவா் சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் பைக்கில் சென்றபோது அவரை வழிமறித்த சிலா் பைக்கில் வேகமாக சென்றதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினராம்.

இதுகுறித்து அசோக்குமாா் தச்சநல்லூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன்(50), சஞ்சய்(19), உதயகுமாா்(40), இசக்கிமுத்து(30) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement