முகப்பு
திருநெல்வேலி

பேட்டையில் கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Updated On : 8 ஜூன் 2026, 12:45 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

பேட்டையில் கிணற்றில் மூழ்கிய சிறுவனின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

பேட்டையில் கிணற்றில் சிறுவன் விழுந்ததாக பேட்டை தீயணைப்பு நிலைய வீரா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று தீயணைப்பு வீரா்கள் தேடினா். அப்போது 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் சடலமாக மீட்கப்பட்டாா். சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் உயிரிழந்தவா், பேட்டை பரதா் தெற்கு தெருவைச் சோ்ந்த வினித் (17) என்பது தெரியவந்தது. குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பேட்டை போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகிறாா்கள்.

Advertisement

Advertisement