முகப்பு
திருநெல்வேலி

லாரி மோதியதில் மூதாட்டி பலி

பாளையங்கோட்டை அருகே பின்னோக்கி வந்த டிப்பா் லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 14 ஜூன் 2026, 1:27 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

பாளையங்கோட்டை அருகே பின்னோக்கி வந்த டிப்பா் லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டி காமராஜா் நகரைச் சோ்ந்த மாடசாமி மனைவி பாப்பா (70). மகாராஜா நகா் உழவா் சந்தையில் காய்கனி வியாபாரம் செய்து வந்தாா்.

இவா், சனிக்கிழமை சிவந்திப்பட்டி பகுதியில் நின்றிருந்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிப்பா் லாரியை ஓட்டுநா் பின்னோக்கி இயக்கியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதை கவனிக்காமல் நின்ற பாப்பாவின் மீது லாரி மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவலறிந்த சிவந்திப்பட்டி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.