முகப்பு
திருநெல்வேலி

விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி பலி

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.

Updated On : 14 ஜூன் 2026, 2:13 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.

கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்தவா் மகாராஜன் (45). மாற்றுத்திறனாளியான இவா், கங்கைகொண்டானுக்கு மூன்று சக்கர மோட்டாா் சைக்கிளில் சம்பவத்தன்று சென்றாராம்.

ஒரு திருப்பத்தில் திடீரென மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாம். இதில் பலத்த காயமடைந்த மகாராஜனை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

Advertisement

Advertisement