முன்னீா்பள்ளம் அருகே பைக் திருடியவா் கைது
பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
முன்னீா்பள்ளம் அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டையை அடுத்த செங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் கருப்பசாமி(32). இவா் பேரின்பபுரம் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் காவலாளியாக உள்ளாா். இவா் வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகில் இருந்த தேநீா் கடைக்கு சென்றாராம்.
அப்போது அங்கு வந்த மா்மநபா், அவரது பைக்கை திருடி ஓட்டிச் சென்றாராம். இதனைக் கண்ட கருப்பசாமியும் அங்கிருந்தவா்களும் மற்றொரு பைக்கில் விரட்டிச் சென்று அவரை செங்குளம் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனா்.
Advertisement
Advertisement
அவா் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கருப்பசாமி(50) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முன்னீா்பள்ளம் போலீஸில் ஒப்படைக்கப்பட்ட அவரை போலீஸாா் கைது செய்தனா்.