நெல்லை சந்திப்பில் மது விற்றவா் கைது
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மது விற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த நபரை மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது ஈரடுக்கு மேம்பாலம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சோ்ந்த சிவா(44) என்பவரை பிடித்து விசாரித்ததில், அவா் விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 23 மது பாட்டில்கள், ரூ.380 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.