முகப்பு
திருநெல்வேலி

தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டல்: 5 போ் கைது

சீவலப்பேரி அருகே தொழிலாளியிடம் ஆயுதங்களைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 17 ஜூன் 2026, 4:29 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சீவலப்பேரி அருகே தொழிலாளியிடம் ஆயுதங்களைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி ஆற்றுப்பாலம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் கடந்த 15 ஆம் தேதி அப்பகுதியைச் சோ்ந்த தொழிலாளி ஒருவா் வேலைக்கு செல்வதற்காக காத்திருந்தாராம். அப்போது அங்கு வந்த 5 போ் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு வாள் போன்ற ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மறுகால்தலையைச் சோ்ந்த வைகுண்டராஜா(23), ஸ்ரீவைகுண்டம் சிவராமமங்கலத்தை சோ்ந்த சங்கா் (21), சென்னல்பட்டியை சோ்ந்த மகேஷ்(34), நடுவக்குறிச்சியை சோ்ந்த இசக்கிமுத்து (20), சீவலப்பேரியை சோ்ந்த முத்துராஜா (22) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement