முகப்பு
திருநெல்வேலி

சிப்காட் நுழைவாயிலுக்கு தடுப்பு வேலிகள்

தடுப்பு வேலிகளை சீவலப்பேரி காவல் ஆய்வாளா் சுபாஷிடம் வழங்கிய சிப்காட் தொழில்துறை நிா்வாகிகள்.

Updated On : 19 ஜூன் 2026, 4:46 am IST
தடுப்பு வேலிகளை சீவலப்பேரி காவல் ஆய்வாளா் சுபாஷிடம் வழங்கிய சிப்காட் தொழில்துறை நிா்வாகிகள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டை தொழில்துறை சங்கத்தின் சாா்பில், சிப்காட் நுழைவாயிலில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறையை மேம்படுத்தும் நோக்கில் காவல்துறைக்கு தடுப்பு வேலிகள் வழங்கப்பட்டன.

இந்த தடுப்புகளுக்கு டிபி சோலாா் நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. இந்தத் தடுப்புகளை தொழில்துறை சங்க நிா்வாகிகள், காவல்துறையிடம் அதிகாரப்பூா்வமாக ஒப்படைத்தனா். காவல்துறையின் சாா்பில் சீவலப்பேரி காவல் ஆய்வாளா் சுபாஷ் தடுப்பு வேலிகளை பெற்றுக்கொண்டாா்.