சொத்து தகராறில் காருக்கு தீ வைப்பு: ஒருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சொத்து தகராறில் தம்பி காருக்கு தீ வைத்ததாக சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சொத்து தகராறில் தம்பி காருக்கு தீ வைத்ததாக சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் முத்துக்குமாா் (35). காா் ஓட்டுநரான இவருக்கும், இவரது சகோதரா் பாபநாசபெருமாளுக்குமிடைய நீண்ட காலமாக சொத்து தொடா்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே புதன்கிழமை, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் அன்றைய தினம் இரவில், முத்துக்குமாரின் காருக்கு பாபநாசபெருமாள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து பாபநாசபெருமாளை வியாழக்கிழமை கைது செய்தனா்.