முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் யோகா பயிற்சி முகாம்

பாளையங்கோட்டையில் யோகா பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஜூன் 2026, 4:58 am IST
திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

பாளையங்கோட்டையில் யோகா பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி பட்டப்படிப்பு பொது மருத்துவத்துறை, மாநகரஆயுதப்படை காவல் துறை இணைந்து சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி முகாமை நடத்தின.

மாநகரஆயுதப்படை உதவிஆணையாளா் கணேசன் தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பட்டப்படிப்பு பொது மருத்துவத் துறைத் தலைவா் ஜி. சுபாஷ் சந்திரன் தலைமையில் மருத்துவா்கள் காா்த்திகேயன், முகுந்தன், நந்தகுமாா், காா்த்திக் அடங்கிய குழுவினா் ஆயுதப்படை காவலா்களுக்கு யோகா பயிற்சி, தியான பயிற்சி, பிரணாயாமம் போன்ற மூச்சு பயிற்சிகள் வழங்கினா். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments