முகப்பு
திருநெல்வேலி

பெருமாள்புரம் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பெண் கைது

பெருமாள்புரம் அருகே மொபட்டில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 25 ஜூன் 2026, 5:26 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பெருமாள்புரம் அருகே மொபட்டில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட ரெட்டியாா்பட்டி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகைகுமாா் தலைமையிலான போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக பருத்திப்பாடு, செல்வா நகரைச் சோ்ந்த 30 வயது பெண் ஒருவா் இயக்கி வந்த மொபட்டை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். பின்னா் அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் அவா், 150 புகையிலைப் பாக்கெட்டுகளை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பெண்ணை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments