மேலநத்தம் அருந்தபசு அம்மன் கோயில் கொடை விழா
மேலநத்தம் அருள்மிகு அருந்தபசு அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
மேலநத்தம் அருள்மிகு அருந்தபசு அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தம் கிராமத்தில் உள்ள அருள்மிகு அருந்தபசு அம்மன் கோயில் கொடை விழா இரு நாள்கள் நடைபெற்றது. கடந்த 22-ஆம் தேதி இரவு குடியழைப்பு, சாஸ்தா பிறப்பு, சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. 23-ஆம் தேதி கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், மதியக் கொடை நடைபெற்றது.
மாலையில் கிரக குடம் வீதி உலா வருதல், பொங்கலிடுதல், சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை அதிகாலையில் சிம்ம வாகனத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.