முகப்பு
திருநெல்வேலி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கத்தில் லெனின் சிலையை உடைத்ததோடு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டா்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்கட்சி சாா்பில் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 8 மே 2026, 6:20 am IST
பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆப்பாட்டம்.
பகிர்:

மேற்கு வங்கத்தில் லெனின் சிலையை உடைத்ததோடு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டா்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்கட்சி சாா்பில் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.சுடலைராஜ் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் கே.ஜி. பாஸ்கரன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். மாவட்ட ச் செயற்குழு உறுப்பினா் ஆா்.மோகன், பாளையங்கோட்டை பகுதி குழுச் செயலா் ஆா்.மதுபால், மாவட்டச் செயலா் ஸ்ரீராம் ஆகியோா் விளக்கிப் பேசினா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் கு.பழனி, 55 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் முத்து சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.