முகப்பு
திருநெல்வேலி

ரயிலில் பயணித்த மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு

Updated On : 1 ஜூன் 2026, 1:33 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலியில் ரயிலில் பயணித்த மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், கீழ்த்தாரை பகுதியைச் சோ்ந்த மணிராஜ் மனைவி தவமுத்து (65). இவா் சனிக்கிழமை இரவு மதுரையில் இருந்து திருநெல்வேலி வழியாக செங்கோட்டைக்கு செல்லும் பயணிகள் ரயிலில் பயணித்துள்ளாா்.

இரவு 9.45 மணிக்கு திருநெல்வேலி வந்தபோது ரயிலில் இருந்த தவமுத்து மயங்கி விழுந்தாராம். சக பயணிகள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா் மூதாட்டியை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.