அடுத்தடுத்த வீடுகளில் 10 பவுன் நகை திருட்டு
துறையூர் அருகே பகளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் சரவணன்(34). உணவகத் தொழிலாளி. இவர், திங்கள்கிழமை காலை வேலைக்கு சென்றார்.
துறையூர் அருகே பகளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் சரவணன்(34). உணவகத் தொழிலாளி. இவர், திங்கள்கிழமை காலை வேலைக்கு சென்றார்.
இவருடைய மனைவி நூறு நாள் வேலைக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 10 பவுன் தங்க நகைகள், ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனராம். இதேபோல், இவருடைய வீட்டருகே வசிக்கும் காளையன் மகன் சுக்குரு(65) என்பவர் தனது மகள் கோமதியை துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது சுக்குரு தனது மகளின் மகப்பேறு செலவுக்காக வீட்டில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. புகார்களின் பேரில், துறையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
பைக் திருட்டு
துறையூர் புதிய சாமிநாதன் நகரைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் மகன் அரவிந்தராஜ். சென்னையில் பணி செய்யும் இவர், தனக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளை 2 மாதங்களாக துறையூரில் உள்ள தனது தந்தை வீட்டில் நிறுத்தியிருந்தார்.
இந்நிலையில், அரவிந்தராஜ் தந்தை சனிக்கிழமை (டிச. 22) காலை எழுந்து பார்த்தபோது, தனது மகனின் இரு சக்கர வாகனம் காணாதது குறித்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் துறையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.