திருச்சி-சென்னைக்கு புதிய பேருந்துகள் இயக்கம்
திருச்சியிலிருந்து சென்னைக்கு, புதிய பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனர்.
திருச்சியிலிருந்து சென்னைக்கு, புதிய பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசு (விரைவு பேருந்து) போக்குவரத்துக்கழகம் சார்பில் அண்மையில் வாங்கப்பட்ட 100 பேருந்துகளில் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்துக்கு மொத்தம் 19 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 பேருந்துகள் திருச்சி-சென்னை இடையே இயக்கப்படவுள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதிய பேருந்துகளை அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தலைமை வகித்தார். போக்குவரத்து கோட்ட மேலாளர் கேசவராஜ், உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.