முகப்பு
திருச்சி

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு புத்தாடைகள்

திருச்சி மனிதம் சமூகப்பணி மையம் மற்றும் பிஎஸ்ஆர் அறக்கட்டளை சார்பில் புத்தூரில் நடைபெற்ற விழாவுக்கு

Updated On : 5 நவம்பர் 2018, 9:16 am IST
பகிர்:

திருச்சி மனிதம் சமூகப்பணி மையம் மற்றும் பிஎஸ்ஆர் அறக்கட்டளை சார்பில் புத்தூரில் நடைபெற்ற விழாவுக்கு மனிதம் சமூகப்பணி மையத்தின் நிர்வாக அறங்காவலர் ஜி.ஆர்.தினேஷ்குமார் தலைமை வகித்தார். பிஎஸ்ஆர் அறக்கட்டளை செயலாளர் டி.குணசீலன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெற்றோரை இழந்த மாணவ, மாணவியர், ஈழத்தமிழர் குழந்தைகள் என சுமார் 200 பேருக்கு தீபாவளி புத்தாடைகளைவழங்கினார். 
தேசியக் கல்லூரியின் உடற்கல்வி ஆராய்ச்சி துறைத் தலைவர் மற்றும் இயக்குநர் டி.பிரசன்ன பாலாஜி, நடிகர் வாளாடி கார்த்திக், பிஎஸ்ஆர் அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் ஜி.கார்த்திக் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
சாலையோர ஆதரவற்றோருக்கு புத்தாடை: 
திருச்சி டைமண்ட் சிட்டி  குயின்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ரயில்வே ஜங்சன், பாரதியார், பாரதிதாசன், பிராமினேட் சாலை, அரசு மருத்துவமனை சாலை போன்ற பகுதிகளில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள், முதியோர் என சுமார் 100 பேருக்கு தீபாவளி புத்தாடைகள், தட்டுகள், தம்ளர், இனிப்புகளை ரோட்டரி மாவட்டம் (3000) மக்கள் தொடர்பு அலுவலரும், ஆடிட்டருமான மோகன், ரோட்டரி சங்கத் தலைவி ஜெயந்தி ராஜ்குமார், செயலாளர் ஜெயஸ்ரீ சுரேஷ், யோகேசுவரி, லலிதா சங்கரன், பிரியதர்ஷினி உள்ளிட்டோர் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments