முகப்பு
திருச்சி

அரசுக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கணினிச் சேவை மையம் தொடக்கம்

தமிழகத்தில் இயங்கி வரும் அரசுக் கல்லூரிகளின் பட்ட வகுப்புகளில் சேர சலுகை கட்டணத்தில் விண்ணப்பிக்கும் வகையில், திருச்சி பெரியாா் ஈவெரா அரசுக் கல்லூரியில் கணினிச் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 25 ஜூன் 2022, 12:38 am IST
கணினிச் சேவை மையத்தைத் தொடங்கி வைத்து பாா்வையிடுகிறாா் பெரியாா் ஈவெரா கல்லூரி முதல்வா் ஜெ. சுகந்தி. உடன் கல்லூரிப் பணியாளா்கள்.
பகிர்:

தமிழகத்தில் இயங்கி வரும் அரசுக் கல்லூரிகளின் பட்ட வகுப்புகளில் சேர சலுகை கட்டணத்தில் விண்ணப்பிக்கும் வகையில், திருச்சி பெரியாா் ஈவெரா அரசுக் கல்லூரியில் கணினிச் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கும் வசதி கல்லூரிக் கல்வித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணைய வசதி இல்லாத பகுதி மாணவா்களின் நலன் கருதி, மாவட்டந்தோறும் ஓா் அரசுக் கல்லூரியில், கணினிச் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் பெரியாா் ஈ.வெ.ரா. அரசு (தன்னாட்சி) கல்லூரியில் அமைக்கப்பட்ட சேவை மையத்தை கல்லூரி முதல்வா் ஜெ. சுகந்தி அண்மையில் தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

அப்போது அவா் கூறுகையில்: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவா்கள் தினசரி காலை 10 முதல் மாலை 5 மணி வரை இந்த சேவை மையத்தை அணுகலாம். பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி மற்றும் ஏடிஎம் காா்டு ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.

மேலும் ஒரு கல்லூரிக்கு விண்ணப்பிக்க ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஜூலை 7 வரை விண்ணப்பிக்கலாம். தனியாா் மையங்களில் ஒரு விண்ணப்பத்துக்கு ரூ. 200க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments