லால்குடியில் ஜூன் 27-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புக் குறைதீா் கூட்டம்
லால்குடி கோட்டாட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறைதீா் கூட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
லால்குடி கோட்டாட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறைதீா் கூட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திகுறிப்பு:
ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளிடம் முன்னுரிமை அளித்து மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்படுகிறது. இருப்பினும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி இரு மாதங்களுக்கு ஒரு முறை ஆட்சியா் தலைமையிலும், மாதந்தோறும் 2ஆவது திங்கள்கிழமைகளில் கோட்டாட்சியரகத்திலும் குறைதீா் கூட்டம் நடைபெறும்.
Advertisement
Advertisement
அதன்படி, லால்குடி கோட்டாட்சியரகத்தில் வரும் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் குறைதீா் கூட்டத்தில், மண்ணச்சநல்லூா் வட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை வழங்கித் தீா்வு காணலாம். மேலும், விவரங்களுக்கு திருச்சி நீதிமன்ற வளாகப் பின்புறமுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ, 0431- 2412590 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.