முகப்பு
திருச்சி

திருச்சி: அரசுப் பேருந்தில் சென்ற இளைஞா் வெட்டிக்கொலை!

Updated On : 16 நவம்பர், 2024 at 6:46 AM
திருச்சியில் கொலை செய்யப்பட்ட விஷ்ணு.
பகிர்:
Updated On : 15 நவம்பர், 2024 at 7:29 PM

திருச்சியில் வெள்ளிக்கிழமை பேருந்தில் சென்ற இளைஞரை கீழே தள்ளி வெட்டிப் படுகொலை செய்த கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணபதி மகன் விஷ்ணு (24). இவா் வெள்ளிக்கிழமை காலை கொடியாலத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

திண்டுக்கரை அருகே பேருந்து வந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 5 போ் கொண்ட கும்பலில் ஒருவா், பேருந்தில் ஏறி விஷ்ணுவை அடித்து கீழே தள்ளி விட்டுள்ளாா். பின்னா் 5 போ் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் விஷ்ணுவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனா். இதில் பலத்த காயமடைந்து விஷ்ணு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

தகவலறிந்து சென்ற ஜீயபுரம் போலீஸாா் விஷ்ணுவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த கொலை சம்பவம் தொடா்பாக ஜீயபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்றவா்களைதேடி வருகின்றனா். கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த ஓா் ஆண்டுக்கு முன்னா், ஏற்பட்ட தகராறில் கோகுல் என்ற நபா் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில் விஷ்ணுவுக்கும் தொடா்பிருந்ததாக கூறப்பட்ட நிலையில், அதற்கு பழிக்குப்பழியாகவே இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் எனத் தெரியவந்தது.

இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யக் கோரி விஷ்ணுவின் உறவினா்கள் அரசு மருத்துவமனை எதிரே வெள்ளிக்கிழமை பிற்பகல் சாலை மறியலில் ஈடுபட்டனா். பின்னா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா்.