திருச்சியில் ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு
திருச்சியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
திருச்சியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
திருச்சி டவுன் ரயில் நிலையம் அருகே சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஸ்டாலின் தலைமையிலான போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
உயிரிழந்தவா் யாா், எந்தப் பகுதியைச் சோ்ந்தவா் போன்ற விவரங்கள் தெரியவில்லை.
Advertisement
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.