முகப்பு
திருச்சி

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

திருச்சியில் 9 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 7 மே 2026, 5:35 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் 9 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி உய்யக்கொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் எஸ். சின்னராஜா (25). இவா் திருச்சி தில்லை நகரில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்த 9 வயது சிறுமியை கடந்த 2024 ஆகஸ்ட் 17-ஆம் தேதி ஏமாற்றி கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பாட்டி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து சின்னராஜாவை கைது செய்தனா்.

Advertisement

திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி சண்முகபிரியா சின்னராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்கவும் உத்தரவிட்டாா்.