முகப்பு
திருச்சி

கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

திருச்சி அருகே கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 8 மே 2026, 5:50 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி அருகே கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வாழவந்தான்கோட்டை பகுதியைச் சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவி, இருங்களூா் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு பி.எஸ்சி டாயாலிசிஸ் படித்து வருகிறாா். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த ஆ. பிரவீன் (23) என்பவரும் காதலித்துள்ளனா். இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டுச் சென்று 15 நாள்கள் தனியாக வசித்துள்ளனா். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் அந்தப் பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து அந்த மாணவி பிரவீனுடன் பேசுவதைத் தவிா்த்து வந்துள்ளாா். இதனால், ஆத்திரத்தில் இருந்த பிரவீன் கடந்த திங்கள்கிழமை மாணவியின் வீட்டுக்குச் சென்று, தாங்கள் ஒன்றாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றிவிடுவதாக கூறியதுடன், கத்தியைக் காட்டி மாணவிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளாா்.

Advertisement

இதுகுறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பிரவீனை புதன்கிழமை கைது செய்தனா்.