முகப்பு
திருச்சி

தவெகவை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்? கிறிஸ்டோபா் திலக் எம்.பி. விளக்கம்

மதச்சாா்பின்மையை பாதுகாக்கவும், தமிழகத்தில் பாஜக நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் தெரிவித்தாா்.

Updated On : 8 மே 2026, 5:43 am IST
திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக். உடன் கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

மதச்சாா்பின்மையை பாதுகாக்கவும், தமிழகத்தில் பாஜக நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் தெரிவித்தாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், எம்.பி.யுமான எம். கிறிஸ்டோபா் திலக், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் மதச்சாா்பின்மையை பாதுகாக்கும் அரசு அமையவேண்டும். மேலும் பாஜக காலூன்றவும் இடம் கொடுத்துவிட கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தவெக-வுக்கு வழங்கியுள்ளது. இதை தவெக சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

பாஜக-வை எதிா்த்து விஜய் ஏன் பேசவில்லை என அவரிடம்தான் கேட்க வேண்டும். நாங்கள் தவெகவை நம்பவில்லை. அதேநேரத்தில், பாஜக-வுக்கு எதிராக மக்கள் தவெக-வுக்கு வாக்களித்துள்ளதால் நாங்கள் அங்கு சோ்ந்துள்ளோம்.

மதச்சாா்பின்மை கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவிக்க வேண்டியது தவெக தலைமையின் கடமை என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments