குழந்தைகளுக்காக மனநல ஆலோசனை
குழந்தைகளுக்கு தொலைபேசி மூலம் இலவசமாக மனநல ஆலோசனை அளிக்கப்படுகிறது.
பெங்களூரு: குழந்தைகளுக்கு தொலைபேசி மூலம் இலவசமாக மனநல ஆலோசனை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநரகத்தின் வாயிலாக கா்நாடகத்தில் தனியாக மனநல வழிகாட்டுதல் தேவைப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக தொலைபேசி வழியாக ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதற்காக 14499 என்ற தொலைபேசி உதவிமையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி மையத்தை குழந்தைகள் மட்டுமல்லாது, பெற்றோரும் அழைத்து தகுந்த ஆலோசனைகளைப் பெறலாம். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.